Skip to main content

காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா... நகை கொள்ளையில் மாணவன் உட்பட 4 பேர் கைது!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரின் மெயின் பஜாரில் அலி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை வைத்திருகு்கும் மைதீன்பிச்சை கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று இரவு தன் நகைக்கடையைப் பூட்டிவிட்டு நகைப்பையுடன் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வேவு பார்த்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு 5 கிலோ தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

 

மாவட்டத்தில் நடந்த இந்த அதிகபட்ச கொள்ளைச் சம்பவத்தை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான சரவணன், 6 தனிப்படைகளை ஏ.எஸ்.பி. மாரிராஜன் தலைமையில் அமைத்தார்.

 

தனிப்படையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற பைக்கில் வந்த மூன்று நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் செல்போன் டவர் சிக்னல்களையும் ஆராய்ந்தனர். அதில் ஒரு நம்பரிலிருந்து தொடர்ந்து பேசியதும், சம்பவத்திற்குப் பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி பின் இரவு 09.00 மணிக்கு மேல் ஆன் செய்யப்பட்டது தெரியவர, சந்தேகத்திற்குரிய அந்த நம்பர் செல்லுக்குரியவர் பாறையடி காலனியின் சுதாகர் என்பதை விசாரணையில் உறுதிசெய்தனர். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்த காவல்துறையினரிடம், அவரும், அவரது கூட்டாளிகளும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

அவரது வாக்குமூலம்படி தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படையினர், அதே காலனியைச் சேர்ந்த அழகு சுந்தரம் என்பவர் மூளையாகச் செயல்பட்டு கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. சுதாகர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தனிப்படையினர், அவர்களிடமிருந்து 2.75 கிலோ நகைகளை கைப்பற்றினர்.

 

கொள்ளை நடத்திய இவர்கள் அங்கிருந்து காருகுறிச்சி வழியாக, திருப்புடை மருதூர் வந்து நகைகளைப் பங்கு போட்டுள்ளனர். தலைமறைவான அழகு சுந்தரத்தை தேடி வருகிறோம் என்கின்றனர் காவல்துறையினர்.

 

"கொள்ளையில் தொடர்புடையவர்கள் அந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் தான். தலைமறைவான அழகு சுந்தரத்திடம் மீதமுள்ள நகைகள் இருப்பதாகப் பிடிபடடவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.

 

பிடிபட்ட கொள்ளையர்களில் சுதாகர் என்பவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு மாணவனாம். சம்பவம் நடந்து ஓவர் நைட்டில் கொள்ளைர்கள் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.