Skip to main content

ஆசிய கிரிக்கெட்.. சிங்கப்பூருக்காக அடித்து விளையாடிய தஞ்சை தமிழன்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

    தமிழர்கள் எங்கே சென்றாலும் சாதிப்பார்கள்.. விளையாட்டிலும் அப்படித்தான். அப்படி சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் செல்லும் இடங்களில் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வெற்றிவாகை சூடிவருகின்றனர். 

 

s


  

 2010 ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பெருமகளூர் கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சிங்கப்பூர் சென்றார் சுரேந்தர் சந்திரமோகன். டெக்னிசியனாக வேலை கிடைத்தது. அத்துடன் தனது ஆர்வமான கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தார். 2013 ம் ஆண்டு அதற்கான காலம் கனிந்து வந்தது. சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தில் வாய்ப்பு கிடைத்து பேட் பிடித்தார். வாகை சூடினார். அதைப் பார்த்து அடுத்தடுத்த உலக கோப்பைகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது. 2016 ல் அதிக ரன்களை குவித்து பெயரும் புகழும் சேர்த்தார். அதே போல மலேசியாவில் 2018 ம் ஆண்டு நடந்த 8 நாடுகள் பங்கேற்ற ஆசிய போட்டியில் சிங்கப்பர் பி. டீமில் விளையாபடி 148 ரன்களை குவித்தார். 


    தற்போது நடந்த ஐ.சி.சி. பைனலில் சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், கத்தார், குவைத் போன்ற 5 நாடுகள் பங்கேற்ற போட்டியில் சுரேந்தர் பங்கேற்ற சிங்கப்பூர் அணி வெற்றி வாகை சூடியது. இதில் 105 ரன்களை குவித்திருந்தார். 

 

s

 


    தொடர்ந்து பல போட்டிகளில் ரன்களை குவித்து சிங்கப்பூருக்காக விளையாடி வரும் சுரேந்தர் சந்திரமோகனை நக்கீரன் வாழ்த்தியது. மேலும் இது குறித்து அவர் கூறும் போது.. 


    பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு. பல ஊர்களிலும் விளையாடி வெற்றி பெற்று திரும்பியதுண்டு. ஒரு நாள் உலக கோப்பைக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனால் பிழைப்புத் தேடி சிங்கப்பூர் வரவேண்டிய சூழ்நிலை. வந்த பிறகு தான் சிங்கப்பூரிலும் வாய்ப்புகள் உள்ளதை தெரிந்து கொண்டு சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தில் நடந்த தேர்வுகளில் பங்கேற்றேன். திறமைக்கு இங்கே பலன் உண்டு.

 

வாய்ப்புகளை கொடுத்தார்கள். நம்மை நம்பியவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது தானே நம் பன்பாடு. அதனால் தான் அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெறச் செய்தோம். தற்போது மற்றொரு தமிழராக சென்னையை சேர்ந்த இளைஞர் எங்கள் அணியில் இணைந்துள்ளார். இந்தியா போல சிங்கப்பூரில் அரசாங்கத்தில் இந்த விளையாட்டு இல்லை. தனி வாரியம். அதனால் விளையாடும் போது அதற்கான மதிப்பூதியம் கிடைக்கும். இந்தியா என்றால் அரசாங்கமே பல உதவிகளை செய்யும். இப்ப கூட நான் வேலை செய்யும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் தான் விளையாடுகிறேன் என்றார்.
    
 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.