Supreme Court upholds welfare petition filed by Nakkeeran teacher!

Advertisment

பள்ளி மாணவர்களை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, நக்கீரன் ஆசிரியர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் ராம் சங்கர் முறையிட்டார்.

அந்த முறையீட்டையேற்ற உச்சநீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.

Advertisment

இதையடுத்து, இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.