Skip to main content

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

1998-ம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக  தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பை அளித்திருந்தது.

 

bala krishna


இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார் அதில், தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனையை மட்டும் நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறையா? தடையா?- மதியம் உத்தரவு!!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
nn

 

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பொது சொத்துக்களை தாக்கிய வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேலுமுறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்தது.  மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

bb

 

கடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். 

 

 

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தண்டனை விதிப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தண்டனையை நிறுத்திவைக்க சொன்னால்கூட சரி தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்துள்ளது. எம்எல்ஏ பொறுப்பில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற நோக்கத்தில் தீர்ப்பை நிறுத்திவைக்க கோருகிறீர்களா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துசெல்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் வாதபிரதி வாதங்கள் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

 

b


தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.    இதையடுத்து அமைச்சர் பதவியை இழக்கும் சூழ்நிலையில் அவர் மேல்முறையீடு செய்வதால் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.


1998ல் கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து 1998ல் போராட்டம் நடைபெற்றது.    இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக  தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.   எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

 

போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.   குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 

 

 சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டதில்    மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு தண்டனை தரப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.  மேலும்,  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும்.  மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதி விதி.                    

                                                 

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை  நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மனு தாக்கல் செய்ததால்,  அவர் மேல்முறையீடு செய்வதற்காக  அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.