Advertisment

ஆளுங்கட்சிக்கு ஆதரவு - குடுமியான்மலை கூட்டுறவு சங்க அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

kudumi

கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் குடுமியான்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளைக் கண்டித்து வெள்ளிக்கிழமையன்று அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

குடுமியான்மலை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கதின் முன்னாள் தலைவர் ஆர்.சி.ரெங்கசாமி தலைமை வகித்தார். கே.காமராஜ், எம்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் நிறைவுரையாற்றினார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்,ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஜோஷ், கபூர்கான், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Officers Co-operative Societies Kudumyanai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe