Skip to main content

ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம்! ம.ஜ.க. 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சி 6வது தலைமை செயற்குழு கூட்டம் 14.03.2019 வியாழக்கிழமை சென்னை திருவல்லிக்கேணி அல்மாலிக் மஹாலில் அவை தலைவர் எஸ்.எஸ்.நாசர்உமரி தலைமையில் நடைபெற்றது.

 

 இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா.எம்.நாசர், இணை பொதுச் செயலாளர்களான கே.எம்.மைதீன் உலவி, ஜெ.எஸ். ரிபாயி, துணை பொதுச்செயலாளர்களான மதுக்கூர் ராவுத்தர் ஷா, கோவை சுல்தான் அமீர், மண்டலம் ஜெய்னுலாப்தீன், ஈரோடு பாரூக், மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்களான N.A. தைமிய்யா, நாச்சிக்குளம் தாஜுதீன், ராசுதீன், சீனி முகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

 

இதில் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் கூறிய கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிறகு பேசிய பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இதற்காக தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும் என்றும், இதன் பொறுப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், உறுப்பினர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச்செயலாளர்கள் மைதீன் உலவி, J.S.ரிபாயி ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஃபாசிஸ்டுகளை வீழ்த்தி, ராகுல் காந்தியை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக மஜக அரசியல் நிலைப்பாடு எடுத்திருப்பதாகவும், அதை இச்செயற்குழு உறுதிசெய்திருப்பதாகவும் கூறினார்.
 

mjk


 

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
 

1, நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கு வேண்டுகோள்;
 

 கடந்த ஐந்தாண்டு காலம் பாஜக தலைமையிலான ஆட்சியில் சமூக நீதி சிதைக்கப்பட்டும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை கொள்கை தகர்க்கப்பட்டுள்ளனர். மதவாதம், ஊழல், மாநில உரிமைகள் பறிப்பு, கொலை, கொள்ளை, சுரண்டல், என நாடு நிர்மூல மாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 

 

இத்தேர்தலில் ஃபாசிசம் ஒழிக்கப்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நாட்டில் அமைந்திட வாக்களிக்கும்படி இந்திய மக்கள் அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

 

அந்த வகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மதிமுக, முஸ்லீம் லீக் மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவது என்று இச்செயற்க்குழு தீர்மானிக்கிறது.
 

2. நிர்வாக குழு முடிவை செயற்குழு வரவேற்கிறது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற தலைமை நிர்வாகக்குழுவின் முடிவை முழு மனதோடு இச்செயற்குழு வரவேற்கிறது.
 

3. CRPF வீரர்களின் தியாகத்தை மெச்சுகிறது. 
 

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கொடும் தாக்குதலால் உயிரிழந்த 44 CRPF வீரர்களின் தியாகத்தை இச்செயற்குழு மெச்சுகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் துயரத்திலும் இச்செயற்குழு பங்கேற்க்கிறது. 
 

4. முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும்
 

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் போராளியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் உண்மை நிகழ்வை இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்த தோழர் முகிலன் அவர்கள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவர் எங்கே? என்ற கேள்வியுடன் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் தற்போது CBCID விசாரணையும் நடைபெறுகிறது.
 

நடைபெற்ற இச்சம்பவம், பொது வாழ்வில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது தமிழக அரசு உடனே அவரை மக்கள் மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

5. பொள்ளாச்சி பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை. 
 

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து, வக்கிர வெறியாட்டம் ஆடிய இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
 

 இந்த கொடியவர்களை எந்த வகையிலும் தண்டனையிலிருந்து தப்பவிடக்கூடாது. தாமதமின்றி இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு தரப்படும் தண்டனை இனி இது போன்ற தவறு செய்யும் நபர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

 

mjk 02


 

 மேலும் இவ்விவகாரத்தில் காவல் துறை அதிகாரி எஸ் பி பாண்டியராஜன், டி எஸ் பி ஜெயராம், எஸ்ஐ ராஜேந்திர பிரசாத் போன்றோர் மீது கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 

இவ்விசயத்தில் யார்  தலையிட்டாலும் அவர்களையும் இந்த குற்றத்தில் இணைத்து தண்டிக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 
 

6. பொள்ளாச்சி பாலியல் வன்முறை வெறியாட்டத்திற்குள்ளான பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கொளரவத்தை கருத்தில் கொண்டு விசாரனை அமையவேண்டும் இச்செயர்க்குழு கேட்டுக்கொள்கிறது.
 

7. 28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து கைதிகளையும் கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் மைதீன், போன்ற நோயாளி கைதிகளையும் உடனே விடுதலை செய்யவேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார். 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.