அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல் சூரப்பாவிற்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்களும் ‘ஜஸ்டீஸ் ஃபார் சூரப்பா’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.