Advertisment

காவல்துறை கண்காணிப்பாளரின் மனிதாபிமானமிக்க செயல்! பாராட்டிய மக்கள்! 

Superintendent of Police's humanitarian act! Appreciated people!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடந்துவந்தது. இதற்காக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்படி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தக ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், ஓடிவரும் பொழுது கால் இடறி நிலை தடுமாறினார். இதில் அவரின் கால்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதேசமயத்தில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஐ.பி.எஸ் அங்கு வந்திருந்தார்.

Superintendent of Police's humanitarian act! Appreciated people!

Advertisment

ஆய்வாளரின் நிலையைக் கண்டு உடனடியாக அவர் அருகே சென்று ஆய்வாளருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். காவல்துறைகண்காணிப்பாளரின் இந்த மனிதாபிமான செயலைக் கண்ட சக காவலர்கள் பொதுமக்கள் என அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், பொதுமக்கள் சிலர், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தங்களது பாராட்டைத்தெரிவித்தனர்.

Chengalpattu
இதையும் படியுங்கள்
Subscribe