Skip to main content

வாழை நட்ட ஏழையை கரையேற்றவிடாத கோடை மழை

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

வாழை, ஏழையை கரையேற்றும் என்பார்கள் கிராமத்தில். ஆனால், இரவெல்லாம் வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் ஒடிந்து கீழே விழுந்து ஏழை விவசாயிகளை கண்ணீர் விடவைத்துள்ளது. 

 

banana

 

திடீர் திடீரென கோடை மழை வேலூர் மாவட்டத்தில் பெய்து வருகிறது. அதன்படி ஏப்ரல் 30ந் தேதி நள்ளிரவு முதல் மே 1ந் தேதி விடியற்காலை வரை வீசிய கடும் காற்றால் வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் மாதகடப்பா பகுதியில் இருக்கும் விவசாயி செல்வகுமார் என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 400 வாழை மரங்கள் சூறாவளி காற்றால் கீழே விழுந்து பெரும் நட்டத்தை அவருக்கு உருவாக்கியது. 
 

ஆம்பூர் அருகே  பெரியாங்குப்பம் அடுத்த ராமு செட்டி குப்பம்  சாமி (எ) சுப்பிரமணி (65), என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 150 வாழை மரங்கள் சேதமடைந்தன. அதேபோல், ராமசெட்டிகுட்டை பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் அதே பகுதியை சேர்ந்த  விவசாயி நிர்மலா, செல்வம், சுப்பிரமணி, வேலு, கம்மியம்பட்டு  பகுதியை சேர்ந்த சாந்தி, புருஷோத்தமன், சீனிவாசன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 3000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக கீழே விழுந்து பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளது. 
 

இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் தெரிவிக்க அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சேதமடைந்த பயிர், மரங்களை பார்வையிட்டு சென்றனர். கடந்த காலங்களில் மழை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரங்கள் விழுந்தால், வீடுகள் சேதமடைந்தால் அதிகாரிகள் வரமாட்டார்கள். இப்போது வந்துள்ளார்கள், அவர்கள் எங்கள் நிலையை கவனத்தில் கொண்டு உண்மையான ஆய்வறிக்கையை தந்து, நட்டயீடு வாங்கி தந்தால் நன்றாகயிருக்கும் என்கிறார்கள் ஏழை விவசாய மக்கள். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் முகூர்த்த நாட்கள்; உச்சத்தில் வாழை இலை விலை

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

banana leaf price hike in erode voc market 

 

ஈரோடு மாவட்டம் வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோயில், பெருந்துறை, சோலார், கவுண்டபாடி, பாசூர், கருமாண்டம்பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ரூ.1000க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும். மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும்1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகரில் ஒரு சில கடைகளில் மாற்று இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் விலை குறைந்துவிடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

 

 

Next Story

புற்றுநோய்க்கு காரணியாகும் 'எத்திலீன் ஸ்ப்ரே' - கோயம்பேட்டில் 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

14 bananas seized in chennai Coimbate

 

காய்கறி, பழங்கள், பூக்கள் என அனைத்தும் மொத்த விற்பனை செய்யும் இடமான சென்னை கோயம்பேட்டில், தடைசெய்யப்பட்ட முறைப்படி வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தொடர்பாக 14 டன் வாழைப்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் இன்று (06.02.2021) காலை சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாழைப்பழங்கள் எத்திலீன் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படுகிறது என்ற புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. எத்திலீன் ஸ்ப்ரே மூலம் வாழைப்பழங்களைப் பழுக்க வைப்பது புற்றுநோய் போன்ற உயிக்கொல்லி  நோயை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் மோசமானது என்ற ஆய்வறிக்கைகள் ஏற்கனவே இருக்கும் நிலையில், இப்படி சட்டவிரோதமாக எத்திலீன் ஸ்ப்ரே பயன்படுத்தி துரிதமாக வாழைப்பழங்களைப் பழுக்க செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். 

 

மேலும் எத்திலீன் ஸ்ப்ரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 14 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்களை அழிப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.