Advertisment

படிக்கும்போது காதல் வேண்டாம் என சொன்னதால் மாணவி தற்கொலை

Suicide

படிக்கும்போது காதல் வேண்டாம் என சொன்னதால் 17 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திருப்பூர்-அவினாசி சாலையில் உள்ள ராக்கியாபாளையம் பத்மாவதிநகரை சேர்ந்தவர் நந்த குமாரின் மகள் ஹர்ஷா (17). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஹர்ஷாவை, படிக்கும் போது காதல் வேண்டாம், எனவே காதலை கைவிடுமாறு கூறி அவரது பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும் ஹர்ஷா அந்த வாலிபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் அவரை எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் ஹர்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suicide
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe