Skip to main content

சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Sugarcane farmers wait in front of the sugar mill!

 

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் அருகேயுள்ள எ.சித்தூரில் உள்ளது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. இந்த ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் 40 கோடி நிலுவை பாக்கி உள்ளது. அதேபோல் விவசாயிகள் பெயரில் வங்கியில் சுமார் 13 கோடிக்கு ஆலை நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கான நிலுவை பாக்கி தராமலும், கடன் தொகை வங்கிகளுக்கு செலுத்தாமலும் உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் பெறும் வேறு வகையிலான கடன்கள் மற்றும் வருவாயை வங்கிகள் விவசாயிகளிடமிருந்து அபகரித்துக் கொள்கிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரியும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக  சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு  பேரணியாக விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.

 

விவசாயிகளுக்கு முழு தொகையையும் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கியில் வாங்கிய கடனை முழுவதுமாக ஆலை நிர்வாகம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் இதே நிலைமை நடைபெறாமல் இருக்க, தமிழக முதல்வர் தலையிட்டு, ஆரூரான்  சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்,  திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளின் கரும்பு பணத்தை உடனடியாக பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி, எந்த வகையிலும் நிலுவைத் தொகை இல்லாத சூழலில் இருந்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதிப்போம் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Sugarcane farmers wait in front of the sugar mill!

 

காத்திருப்பு போராட்டத்தில் தமிழக உழவர் முன்னணி தலைவர் முருகன்குடி முருகன், பா.ஜ.க விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்த்தேசிய பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன், ஜனநாயக விவசாய சங்கம் ராமர், கந்தசாமி அவர்களும் இந்திய ஜனநாயக கட்சி விவசாய அணி தலைவர் மேமாத்தூர் அண்ணாதுரை, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ராஜா, மணிமுத்தாறு பாதுகாப்பு குழு பாலு, ராஜேந்திரன், நாகராஜன், கச்சிமயிலூர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், செந்தில்குமார் பாக்கியராஜ், பெண்ணாடம் விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

பின்னர் வேப்பூர் வட்டாட்சியர் மோகன் மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததுடன் சர்க்கரை ஆலையில் மாற்று பணிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஆலையை மூடி சீல் வைத்தார், அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.