Skip to main content

சேலம், நாமக்கல் ஆர்டிஓ அலுவலகங்களில் திடீர் விஜிலன்ஸ் ரெய்டு; தர்மபுரி பேரூராட்சி அலுவலகத்திலும் சோதனை!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

Sudden vigilance raid at Salem, Namakkal RTO offices; Check at Dharmapuri Municipal Office too!

 

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் செப். 30- ஆம் தேதி ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

 

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, உடையாப்பட்டியில் உள்ள சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) சோதனை நடத்தினர். இங்கு ஜெயகவுரி என்பவர் ஆர்டிஓ-வாக பணியாற்றி வருகிறார். 

 

இந்த அலுவலகத்தில் புதிய வாகனம் பதிவு செய்தல், தகுதி சான்றிதழ் வழங்குதல், பழைய வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக லஞ்ச வேட்டை நடத்தப்படுவதாகப் புகார்கள் சென்றதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது. 

 

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் காவலர்கள் செப். 30- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், சேலம் கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நுழைந்து சோதனையைத் தொடங்கினர். 

 

ஆர்டிஓ ஜெயகவுரி, போக்குரவத்து ஆய்வாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட பத்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் சோதனை முடிந்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத 60,700 ரூபாய் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

அதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்டிஓ அலுவலகத்திலும் சோதனை நடந்தது. ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் 7 பேர் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர். 

 

இந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இரவு 11.30 மணி வரை இந்த அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் 2020 - 2021ம் நிதியாண்டில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக சுகாதார பொருள்கள், குடிநீர் பயன்பாட்டுக்கான உபகரணங்கள், மின்னணு பொருள்கள் 45 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதும், அதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் சென்றன. 

 

இதையடுத்து, தர்மபுரி லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில், அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். 

 

அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். சுமார் 5 மணி நேரம் அங்கு சோதனை நடந்தது. பொருள்கள் கொள்முதல் செய்தது தொடர்பான கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

 

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையின் திடீர் சோதனையால் லஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.