Advertisment

ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம்; பெண் தோழி உள்பட 3 பேர் கைது!

A sudden twist in the auto driver case

Advertisment

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர்(43). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்றைய முன்தினம்(16.11.2024) மாலை சவாரிக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடிய நிலையில் சீரா தோப்பு அருகே சுதாகர் என்பவரது வீட்டின் முன்பு அவரது ஆட்டோக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாஃபர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் சிராதோப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரின் பள்ளி தோழியான சுதா(35) இவர் தனியார் பள்ளி வேனில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பழக்க வழக்கம் ஏற்பட்டது. இதனால் இரு விட்டார்களும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனோகரனின் மனைவி விபத்தில் இறந்த நிலையில் சுதாவுடனான நட்புதிருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சவாரி செல்வதாக கூறிவிட்டு சுதா வீட்டிற்கு சென்ற மனோகர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதா மனோகரை எங்கேயாவது சென்று செத்துப் போ என்று கூறியும் மேலும் கடுமையான வார்த்தைகளாலும் கடுமையான திட்டி உள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த மனோகர் தனது தோழி சுதாவின் சேலை எடுத்துக் கொண்டு சென்று சுதாவின் வீட்டிற்கு முன்பு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, தனது ஆண் நண்பர் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா உடனடியாக தனது கணவர் சுதாகர் மற்றும் மாமனார் சுப்பிரமணி உதவியுடன் வீட்டில் இருந்த அருவாளை எடுத்துக் கொண்டு சென்று சேலையை அறுத்து விட்டுள்ளானர். இதில் கீழே விழுந்த மனோகரன் உடல் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மூவரும் சென்று மனோகரனின் உடலை ஆட்டோக்குள் வைத்துவிட்டு ஏதும் தெரியாது போல் வீட்டுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் சுதா மற்றும் சுதாவின் கணவர் சுதாகர் மற்றும் மாமனார் சுப்பிரமணிய ஆகியோரை காவல் நிலைய அழைத்து வந்து விசாரித்ததில் மேற்கண்ட தகவலை சுதா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து மூவரையும் மனோகரனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

woman arrested police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe