Advertisment

நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்... விசாரணை வளையத்தில் பெற்றோர்!

Sudden turn in the incident where a child who ate noodles... Police are investigating the parents!

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் போலீசாரின் பார்வை பெற்றோர் மீது தற்போது திரும்பியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற 2 வயது குழந்தைக்கு சிலநாட்களுக்கு முன்பு உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையளித்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்தருணுக்கு அவரது தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்தநாள் காலையிலும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த நூடுல்சை தாய் குழந்தைக்கு சாப்பிட கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், மாலை நேரத்தில் மிகவும் சோர்வாக காணப்பட்ட குழந்தை வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இது குறித்து திருச்சி கொள்ளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்சை கொடுத்ததால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு குழந்தை இறந்து இருக்கலாம் என சந்தேகித்திருந்தனர். இருப்பினும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்தனர் காவல் துறையினர். இதில் குழந்தையின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதும், உடலில் காயங்கள் இருப்பதும், குறிப்பாக சிறுநீர் கழிக்கும் இடத்தில் காயம் இருந்ததும் தெரியவர, இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக குழந்தையின் பெற்றோரான சேகர்- மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe