Skip to main content

'சவர்மா' சாப்பிட்ட 17 பேருக்கு திடீர் உடல்நலக் கோளாறு!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 Sudden health problems for 17 people who ate Savarma!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில் 'சவர்மா' (ரொட்டிக்குள் சிக்கன் வைத்த உணவு) என்ற உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மணமேல்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், சிறப்பு விருந்தாக அறந்தாங்கியில் உள்ள ஒரு புதிய துரித உணவுக் கடையில் இருந்து சவர்மா என்ற உணவை 8 பார்சல்கள் வாங்கிச் சென்று 12 பேர் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் திங்கள்கிழமை மதியம் ஜாகிர்உசேன், அசாருதீன், ரவுசுதீன், சல்மான் பாரிஸ், வசுபுதீன், மைதீன் உள்பட 12 பேருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினாலும், மறுபடியும் வாந்தி ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு வந்துள்ளனர். தற்போது 3 பெண்கள் உட்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 Sudden health problems for 17 people who ate Savarma!

 

அதேபோல அறந்தாங்கியில் அதே கடையில் சவர்மா வாங்கிச் சாப்பிட்ட 5 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “சவர்மா என்பது ரொட்டிக்குள் சிக்கன் வைத்து செய்யும் ஒருவகை உணவு. அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. டாக்டர்களும் ஃபுட் பாய்சன் என்று சொல்கிறார்கள். கெட்டுப்போன சிக்கன் வைத்து எங்களுக்கு சவர்மா செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

 

இத்தனை பேர் மருத்துவமனைக்குப் போன பிறகும் கூட, உணவு பாதுகாப்புத்துறை ஏனோ அமைதியாக இருந்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, விசாரணையை மேற்கொண்டுள்ளது உணவு பாதுகாப்புத்துறை. உணவே மருந்து என்கிறார்கள் ஆனால் இங்கே?

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.