Skip to main content

விவசாய நிலத்தை அழிக்கும் டாஸ்மாக்; கடையை அகற்றக் கோரி மக்கள் திடீர் போராட்டம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

Sudden protest by people demanding the removal of the Tasmac store

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது பெரவலூர் கிராமம். இந்த கிராமப்பகுதி அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குடிப்பதற்கு வரும் மது அருந்துவோர், மது அருந்திவிட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்வதற்காக நிலத்தில் இறங்கி விவசாயிகள் வேலை செய்ய முடியாத அளவில் காலில் கண்ணாடி சிதறல்கள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது.

 

மேலும், இப்பகுதியில் பெண்கள், பள்ளி குழந்தைகள் நடமாட முடியாத நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், மது அருந்துவோரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை அப்பகுதி பொதுமக்கள் தட்டிக் கேட்பதால் மதுப் அருந்துவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை இங்கு இருந்தால் பிரச்சனை அதிகரிக்கும்; எனவே இதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நேற்று அந்த டாஸ்மாக் கடை முன்பு திடீரென முற்றுகையிட்டு பொதுமக்கள் கடையைத் திறக்க விடாமல் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தையடுத்து சுந்தராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் சையத் காதர் மற்றும் போலீஸார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு தினங்களில் இந்த கடையை காலி செய்து விடுவதாக வட்டாட்சியர் உறுதி கூறியதைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.