Skip to main content

குற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு! இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் பலி! 

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Sudden flood in kotralam Falls! 2 women passed away

 

தென் மேற்கு பருவமழையின் தாக்கம் மே மாதம் தொடங்கினாலும் போதுமான சூழல் தென்படாமல் போகவே அருவிகளில் மே, ஜூனில் தண்ணீர் வரத்து இல்லாமலிருந்தது. இந்தச் சூழலில் கடந்த வாரம் இதமான சீதோஷ்ணம் காரணமாக சாரல் மழை நீர்ப்பிடிப்பு பகுதியில் பொழிய, அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்பட்டது. ஆனால் விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகம் காணப்பட்டது.

 

இதனிடையே கடந்த சில நாட்களாக வெயில் அடித்த போதிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீரே விழுந்தது. இந்தச் சமயத்தில் நேற்று காலை குற்றாலத்தில் வெயில் அனலாக அடித்த நிலையில் மதியத்திற்குப் பிறகு சீசன் மாறி மழை பொழியத் தொடங்கியது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் குற்றாலத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததன் விளைவாக சுமாராகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்த மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பையும் தாண்டி வெள்ளம் கொட்டியது. உஷாரான காவல்துறையினர் ஒலி பெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் பயத்தில் வெளியேறினர். பெண்கள் பகுதியில் கூச்சல்கள் கிளம்பின. 2 பெண்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டனர். இதில் ஆண்கள் பகுதியில் விழுந்த மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். மற்றொருவர் இரண்டாம் பாலம் அருகே மீட்கப்பட்டார். ஆனால் அடித்துச் செல்லப்பட்ட பெண்களை மீட்க முடியவில்லை. கண்ணெதிரே நடந்த சம்பவத்தைக் கண்டு கூச்சலிட்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் இறங்கித் தேடினர். இதில் 2 பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டது.

 

Sudden flood in kotralam Falls! 2 women passed away

 

பண்ருட்டி நகரின் அன்வர்ஷா காலனியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) மற்றும் சென்னை பெரம்பூர் தேசிய காலனி ஜமாலியா நகரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (42) இருவரும் மீட்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர்கள் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 


குற்றால அருவிகளின் வரலாற்றில் இதுபோன்று வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்ததில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மினுமினுக்க மினரல் ஆயில்; பேரீச்சை சர்ச்சையில் மீண்டும் குற்றாலம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024

 

mineral oil for shimmer; Again in the date controversy

குற்றாலத்தில் அண்மையில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த ஐந்தாம் தேதி குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

mineral oil for shimmer; Again in the date controversy

இந்நிலையில், அதே குற்றாலம் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு கடையில் பேரீச்சை பழத்தின் மீது மினரல் ஆயில் தடவி புதியது போல பளபள என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பேரீச்சை பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,100 கிலோ மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு ஆயில் பூசி விற்கப்படும் பேரீச்சை உடலுக்கு மிகவும் கெடுதல் என தெரிவித்த அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். 

Next Story

சபரிமலை பக்தர்களே குறி; 4,000 கிலோ மஸ்கோத் அல்வா பறிமுதல் 

Published on 04/01/2024 | Edited on 05/01/2024
Sabarimala devotees are the target; 4,000 kg mascot alva seized

குற்றாலத்தில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரிச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.