Skip to main content

திறக்கப்பட்ட பூங்காக்கள் மீண்டும் திடீர் மூடல்! கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

Sudden closure of open parks again! Kodaikanal tourists disappointed !!

 

கொடைக்கானலில் கரோனா  பரவும் அபாயம் காரணமாக திறக்கப்பட்ட 2 நாளில் மீண்டும் பூங்காக்கள் மூடப்பட்டதால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். ஆனால், கரோனா என்னும் கொடிய நோயால் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கரோனா குறைந்ததின் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் (05.07.2021) முதல் அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் ஆகியவை திறக்கப்பட்டன. வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொடைக்கானலுக்குப் படையெடுத்தனர். பூங்காக்களில் சுற்றித் திரிந்த பூக்களைப் பார்த்து ரசித்தனர்.

 

Sudden closure of open parks again! Kodaikanal tourists disappointed !!

 

இந்நிலையில், திறக்கப்பட்ட பூங்காக்களில் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வுசெய்தனர். அதன்படி நகராட்சி ஆணையாளர் நாராயணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன், இணை இயக்குநர் ரமேஷ், தாசில்தார் சந்திரன், சுற்றுலா அலுவலர் ஆனந்தன், நகர்நல அலுவலர் சுப்பையா, நகரமைப்பு அதிகாரி அப்துல் நாசர், அலுவலர் பார்த்தசாரதி, பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் பல்வேறு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது பூங்காக்களில் தனிமனித இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் சுற்றுலா பயணிகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சுற்றுலாப்  பயணிகளை எச்சரித்த ஆர்.டி.ஓ, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், இதுதொடர்பாக கலெக்டர் விசாரணைக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதேநிலை நீடித்தால் கொடைக்கானலில் மீண்டும் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கருதினர். இதனையடுத்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆர்.டி.ஓ. முருகேசன் ஆலோசனை நடத்தினார்.

 

Sudden closure of open parks again! Kodaikanal tourists disappointed !!

 

அதன்பின் பத்திரிகையாளர்களுடன் பேசும்போது, ''கரோனா குறைந்ததால் கொடைக்கானல் பசுமை பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போதுவரை கொடைக்கானல் தாலுகா முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் 13 நோயாளிகள் மட்டுமே உள்ளனர். ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படவில்லை. இதன் கார ணமாக கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக் காமலும்,  முகக் கவசம் அணியாமலும் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமுள்ளது. இது தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கொடைக்கானல் திறக்கப்பட்ட பிறகு செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் கோக்கர்ஸ் வாக் ஆகியவை நாளைமுதல் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுகிறது. இதேபோல் கொடை க்கானலுக்கு வருகைதரும் சுற்று லாப் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருவதற்குத் தடையும் இல்லை. கொடைக் கானலில் தற்போது நிலவும் மிதமான பருவநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்துவிட்டுச் செல்லலாம். தொற்று பரவாமல் இருப்பதற்காகவே பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு கொடைக்கானல் பொது மக்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என்று கூறினார். 

 

இதற்கிடையே கொடைக்கானல் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் சுற்றுலாத் துறையை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திறக்கப்பட்ட பூங்காக்களுக்கு இரண்டு நாளில் மூடுவிழா நடத்தியிருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.