Skip to main content

சிலை மோசடியில் திடீர் கைது- பழனி கோவில் பணியாளர்கள் அதிர்ச்சி

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை தொடர்பான மோசடி வழக்கில் ஏற்கனவே ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்துறை  கைது செய்து  தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள். 

 

அதை தொடர்ந்து பழனிக்கு விசிட் அடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த  இரண்டு நாட்களாக கோவில் பணியாளர்கள்  மற்றும் முன்னாள்  பணியாளர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.

 

arrest

 

 

arrest

 

அதை தொடர்ந்து பழனி கோவிலில் பணிபுரிந்த உதவி ஆணையர்  புகழேந்தி  மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை  தலைமை அலுவலகத்தில் தங்கநகை சரிபார்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த தேவேந்திரன் ஆகியோரை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவலர்க்குழு திடீரென கைது  செய்து அதிரடி  விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் கைது நடவடிக்கையால் கோவில் பணியாளர்கள் பலர்  அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர்.

சார்ந்த செய்திகள்