Skip to main content

"இதுபோன்ற சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

"Such an incident should be the last incident" - the melting of Chief Minister MK Stalin in the legislature!

 

சட்டப்பேரவையில் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகள் அகற்றும் பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மயிலாப்பூரில் நேற்று ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து, அதிலே கண்ணையா என்ற ஒருவர் தீக்குளித்து இன்று காலையிலே அவர் உயிரிழந்திருக்கிறார் என்ற அந்த நிலையில் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் இது குறித்து பேசியுள்ளீர்கள். 

 

அதற்குரிய விளக்கத்தை வருவாய் துறை அமைச்சர், இங்கு விளக்கமாகக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. உயிரிழந்த அந்த குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலகட்டத்தில், இதுபோன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளக் கூடிய நேரத்தில் முன்கூட்டியே, அந்த பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யப்படும் இடம் குறித்து அவர்களுடைய கருத்து கேட்டு, அந்த பகுதி மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணக்கமான சூழ்நிலையை நிச்சயமாக வரக்கூடிய காலகட்டத்தில் நாங்கள் ஏற்படுத்துவோம். 

 

புதிய இடத்திலே தேவைப்படும் அனைத்து வசதிகளோடு ஏற்படுத்தப்பட்ட பின்னரே மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை அனைத்து மக்களின் நலன் சார்ந்த அம்சங்களாகக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நீங்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும், அதைவிட கூடுதல் மனச்சுமையுடனும், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இதுபோன்ற சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். நிச்சயமாக, இங்கே அமைச்சர் சொல்கின்ற போது அருகிலேயே, அந்த பகுதிகளிலேயே அந்த மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதக்கூடிய அந்த நிலையை எடுத்து சொன்னார். 

 

ஏற்கனவே, குடிசை மாற்று வாரியத்தின் திட்டம் மூலமாக மந்தவெளி- மயிலாப்பூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கக் கூடிய வீடுகளில் நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்து இருக்கிறது" எனத் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.