Skip to main content

தோண்டப்பட்ட கால்வாயில் அடுத்தடுத்து விழுந்த வாகன ஓட்டிகள்

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

A succession of motorists fell into the dug canal

 

பூந்தமல்லி அருகே கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தாம்பரம் அடுத்த பாரிவாக்கம் சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்வதற்காக 15 அடி ஆழமுள்ள ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்