Skip to main content

சென்னை புத்தக சங்கமத்தின் தொடரும் சாதனை

Published on 23/04/2018 | Edited on 24/04/2018
chennai

 

 சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தரைத்தளம் மற்றும் கீழ்த்தளத்தை ஒருங்கே இணைக் கின்ற வகையில் 44 அரங்குகளைக் கொண்டு 20.4.2018 முதல் 25.4.2018 முடிய ஆறு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் (20.4.2018) மாலை புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடக்கிவைத்தார். புத்தகச் சங்கமத்தில் சிறப்பு நிகழ்வுகளாக மாலை ஆறு மணிக்கு சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு உரையரங்கம் நடைபெற்று வருகிறது.

 

சென்னை புத்தக சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவன வெளியீடுகளுக்கான அரங் கங்கள், ஊடகவியல் துறையினரின் பதிப்பக அரங்குகள், சமூகப்பிரச்சினைகளை படம்பிடித்துக்காட்டும் பல் வகை இலக்கியங்களைக் கொண்ட பதிப்பகங்களின் அரங்குகள், பக்தி இலக்கியங்கள், வரலாற்று நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், அறிவியல், இந்திய வரலாறிலிருந்து பன்னாட்டு வரலாறுகளைக் கொண்ட நூல்கள், கல்வித்துறைக்கான புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்கள், கணினி அறிவியல் புத்தகங்கள் என பல்துறை புத்தகங்கள் சென்னை புத்தக சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பகவத் கீதை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  எழுதிய கீதையின் மறுபக்கம், மனுதர்மம், சுவாமி சிவானந்த சரசுவதி எழுதிய ஞானசூரியன், குடிஅரசு தொகுதிகள், பெரியார் களஞ்சியம் தொகுதிகள், அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள், மனு தர்மம் தமிழாக்க புத்தகம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி அகராதிகள், திருக்குறள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், மழலையருக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த புத்தகங்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் அரங்குகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

 

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் எழுதிய நூல்கள், இலக்கியவாதிகள், பன்னாட்டளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவியலாளர்களின் நூல்கள் புத்தக அரங்குகளில் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.  சிறீ அலமு புத்தக நிலையம், ஏசியன் புக் சென்டர், ஓம் ஜெயசக்தி புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ், சூர்யா, மதுமிதா புக்ஸ், ஈஸ்வர் புக் சென்டர், ஏ அண்ட் ஈ பப்ளிஷிங் ஹவுஸ், சந்தியா பதிப்பகம், வானவில் புத்தகாலயம், பாரி நிலையம், சித்திரா நிலையம், இந்தியா டுடே டி.எஸ்.டி, பாஸ்கர் புக் ஹவுஸ், உயிர்மை பதிப்பகம், ஹிக்கின் பாதம்ஸ் பிரைவேட் லிமிடெட்,, .சேகர் பதிப் பகம், அருவி வெளியீடு, நக்கீரன், இன்ஃபோ மீடியா, புக் வேர்ல்டு, புதிய வாழ்வியல், ஏ.என்.ஏ புக்ஸ், அதிதன் புக்ஸ், தியாகராயர் நகர், லோட்டஸ் மல்டி மீடியா, முன்னேற்றப் பதிப்பகம், ஓம் சக்தி புக்ஸ் இன்டர்நேஷனல், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், புதுப்புனல், விழிகள் பதிப்பகம், பூம்புகார் பதிப்பகம்,  சிறீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், புக் வேர்ல்ட் லைப்ரரி, நடராஜ் பப்ளிகேஷன்ஸ், கீதா புக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் சார்பில் புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்புப் புத்தகக் காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு தள்ளுபடியில் அளிக்கப்படுகின்றன. பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் நாள்தோறும் குலுக்கல் முறையில் வாசகப் பார்வை யாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, எஸ்.எம்.சில்க்ஸ் வழங்கும் புடவை, பவார் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் செல்பேசி மற்றும் 15வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் 3ஆம் நாளான நேற்று ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகக் காட்சியின் மூன்றாம் நாளான நேற்று (22.4.2018) மாலை 6 மணி யளவில் 'இளைஞர்களும் வாசிப்பும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

 

எமரால்டு பப்ளிஷர்ஸ் கோ.ஒளிவண்ணன், கட்டுரை யாளர் ஜெ.தீபலஷ்மி, எஸ்.சிவக்குமார், வழக் குரைஞர் பி.வி.எஸ்.கிரிதர், ஜெயநாதன் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை புக் கிளப் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஒருங்கிணைத் தது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் இயக்க வெளியீடுகள் வழங்கி சிறப்பு செய்தார்.

 

கடுமையான வெயில் வெளியில் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி அரங்குகள் முழுவதுமாக குளி ரூட்டப்பட்டு இருப்பதால் வாசகர்கள், பார்வையாளர்கள் சோர்வின்றி புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். வாச கர்கள் பெரிதும் குடும்பத்துடன் வருகை தருகிறார்கள். புதிதாக வருகைதருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.