ADVERTISEMENT
இப்படத்தின் கதை திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமம் உட்பட திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்றது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார் திரையரங்கத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
ADVERTISEMENT
Show comments