Skip to main content

'கஜா' புயலால் காணாமல் போன வீடு... தன்னம்பிக்கையுடன் படித்து மருத்துவக் கனவை எட்டிப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி!

Published on 20/11/2020 | Edited on 21/11/2020

 

The success of the effort ... We lost our homes in the gaja storm that day ... Today I am a doctor!

 

கடந்த 2018ஆம் ஆண்டு, தன்னுடைய கோரத்தாண்டவத்தைக் காட்டிச் சென்ற 'கஜா' புயல், பல கடலோர மாவட்டங்களில் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி பாரபட்சமில்லாமல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. அது புரட்டிப் போட்டது, உடைமைகளை மாத்திரம் அல்ல, பலரது வாழ்க்கையையும் தான். அந்தக் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, தனக்கென்று இருந்த ஒரு சிறிய குடிசையையும் இழந்த நிலையில், தன்னுடைய விடா முயற்சியால் இன்று மருத்துவம் பயில வந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவி, சஹானாவை நேரில் சந்தித்தோம்.


மிகவும் எளிமையாக, கண்ணில் அந்த ஏழ்மையின் அடையாளத்தோடு, திருச்சி கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த மாணவியிடம் பேசுகையில். ''எங்களுடைய சொந்த ஊா் தஞ்சைக்கு அருகில், பேராவூரணி வட்டத்தில் உள்ள, பூக்கொள்ளை கிராமம். என்னுடைய அப்பா கணேசன், அம்மா சித்ரா. வயலில் தங்கி நிலங்களை பராமரிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்கள். வீட்டில் மின்சார வசதி இல்லை, அதனால் பள்ளியிலேயே தங்கி படித்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருவேன். கடந்த 2018 -ஆம் வருடம், இதே நவம்பா் மாதத்தில், எங்களுடைய வாழ்க்கையை மாற்றிய, அந்த 'கஜா' புயலால் எங்களுடைய வீடு இருந்த இடம் தெரியாமல் போனது.

 

பல மாதங்கள் கஷ்டப்பட்டோம், தங்குவதற்கு வீடு இல்லாமல் பள்ளிகளில் தங்கினோம். பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு, 12ஆம் வகுப்பை முடித்தேன். என்னுடைய முயற்சிக்கும், என் குடும்பத்தின் தியாகத்திற்கும், 12ஆம் வகுப்பில், 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்தேன். ஆனால், தொடா்ந்து படிக்கவோ, அல்லது நீட் தோ்விற்குத் தயார் செய்யவோ, எனக்குப் போதிய வசதி இல்லை. இந்தச் செய்தியை அறிந்த நடிகா் சிவகார்த்திகேயன், எனக்குப் படிக்க உதவி செய்தார்.

 

cnc

 

நீட் தோ்விற்குப் பயிற்சி வகுப்புக்குச் சென்று படித்தேன். மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு 273 மதிப்பெண் எடுத்தேன். எனக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில், படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்று, கல்லூரியில் அட்மிஷனுக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த நடிகா் சிவகார்த்திகேயன் சாருக்கும், அவா் எனக்கு உதவுவதற்குக் காரணமாக இருந்த செய்தியாளா்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குளியலறையில் ரகசிய கேமரா; வசமாக சிக்கிய மருத்துவ மாணவர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
A medical student caught in the lurch at Hidden camera in the bathroom

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.  

அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, அந்த பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், குளியல் அறையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பேனா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அது உளவுக்கருவி என்பதும் அதில் கேமரா இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன், ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். குளியலறையில், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.