Skip to main content

தேர்தல் வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம்! சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நம்பிக்கை!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அதை கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

dmk

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்தமுறை கூட்டணி அமைப்பதிலும், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என எல்லாவற்றிலும் ஆரம்பத்தில் இருந்தே திமுக  படு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. 

 

 

ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 17) மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 23 மணி நேரத்திற்குள்ளாகவே, சேலம் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் ஜெட் வேகத்தில் நடத்தி முடித்திருக்கிறது திமுக. சேலத்தில் திங்கள்கிழமை (மார்ச் 18, 2019) மாலையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்து, எஸ்.ஆர்.பார்த்திபனை அறிமுகப்படுத்தினார். 

 

dmk

 

முக்கிய தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கச் செய்திருந்தது, சேலம் மத்திய மாவட்ட திமுக. மிகக்குறுகிய காலத்தில் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்ததோடு, கூட்டம் நடந்த திருமண மண்டபத்தில் அமர இடம் போதாத அளவுக்கு கூட்டத்தையும் திரட்டி இருந்தார் எல்எல்ஏ ராஜேந்திரன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லோருமே திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி அளித்தார்கள். அதே மேடையில் இக்கூட்டத்திற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் சிலாகித்து பேசினார்கள்.

 

 

திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கேடுகெட்ட ஆட்சி. பாஜகவும், மக்கள் விரோத ஆட்சியைத்தான் நடத்தியது. 480 ரூபாய்க்கு விற்ற காஸ் சிலிண்டர், இன்றைக்கு 1050 ரூபாயாக உயர்ந்து விட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்து, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முடக்கி  விட்டது பாஜக. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏராளமான சிறு,குறு தொழில்கள் அடியோடு முடங்கி விட்டன. இப்படி எல்லா வகையிலும் நாட்டையே குட்டிச்சுவராக்கிவிட்ட பாஜக எப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும்?

 

dmk

 

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சொந்த மாவட்டம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நம் கட்சிக்காரர்கள் கூட சிலர் இங்கே பேசினார்கள். ஒருமுறை பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்தார். ஆனாலும் அவர் அந்த தொகுதியில் தோற்றுப்போனார். அதுபோலதான் இப்போதும் நடக்கப் போகிறது. எடப்பாடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள்.  

 

 

அதிமுக வைத்திருப்பதெல்லாம் மெகா கூட்டணியா? அந்த கூட்டணியில் ஒரு கட்சியின் பொறுப்பாளராக உள்ள ஒருவர், மணப்பெண் என்றால் பத்து பேர் வந்து பெண் கேட்கத்தான் செய்வார்கள் என்கிறார். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு மணப்பெண் பத்து வீட்டுக்குப் போய், என்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ் சுவதுதான் கேவலம். அதைத்தான் அந்த பெண்மணி செய்தார்.

 

 

கடந்த தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லி போட்டியிட்ட பாமகவால் 5.4 சதவீத ஓட்டுகள்தான் பெற முடிந்தது. அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு அவர்களிடமே கூட்டணிக்காக கைகுலுக்கி, தரக்குறைவான கேடுகெட்ட செயலைச் செய்கின்றனர். மக்கள் அவர்களை நிர £கரிப்பார்கள். 

 

 

ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு தமிழகத்தில் திமுக&காங்கிரஸ் கூட்டணி அலை இருப்பதாக உளவுத்துறை சொல்கிறது. நிச்சயம் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 2011 சட்டமன்ற தேர்தலின்போது நான் ஒரு ரூபாய்கூட காசு செலவழிக்காமல்தான் வெற்றி பெற்றேன். ஆனால், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி, ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தும் தோற்றார். அதுதான் இப்போதும் நடக்கப் போகிறது. ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

 

 

மேட்டூர் எம்எல்ஏவாக இருந்தபோது மக்கள் நலனுக்காக 54 போராட்டங்களை நடத்தினேன். அதில் 50 போராட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறேன். பட்டா மாறுதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினேன். பிச்சை மூலம் கிடைத்த 3 லட்சம் ரூபாயை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், அதை அப்போதைய கலெக்டர் மகரபூஷணத்திடம் கொடுப்பதற்காகச் செல்ல இருந்தேன். இதையறிந்த கலெக்டர் என்னை தொடர்பு கொண்டு, எல்லோருக்கும் பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறினார். அப்படி ஒரு நாளில் 3000 பேருக்கு இலவசமாக பட்டா மாறுதல் பெற்றுக் கொடுத்தேன்.

 

 

திமுக தலைவர் கலைஞர் மறைந்தபோது, அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே இடம் இல்லை என்று மறுத்தவர்தான் எடப்பாடி. அண்ணாவுக்கு அருகில் இடமில்லை என்ற எடப்பாடிக்கு சேலத்திலும் இடமில்லை என்று இந்த தேர்தலில் மக்கள் சொல்வார்கள். மக்களவை தேர்தலில் சேலம் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றியை நாம் கலைஞரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.

 

 

தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திரகுமார், கந்தசாமி, திமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், கலையமுதன், ஜி.கே.சுபாசு, கார்த்திகேயன், தாமரை கண்ணன், லதா சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.