Published on 27/07/2021 | Edited on 27/07/2021

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவராக திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் ஐ. லியோனியை சில தினங்களுக்கு முன்பு நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக பேராசிரியர் சுப. வீரபாண்டியனை நியமித்து மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.