Advertisment

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!

Sub-inspector arrested in Pocso for misbehaving with two girls

Advertisment

கோவை மாநகர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளையும் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணிற்கு 17 மற்றும் 18 வயதுகளில் இரு பெண் குழந்தை உள்ளன. 17 வயது சிறுமி 11 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். 18 வயது சிறுமி கல்லூரில் படித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் இருவரையும் காணவில்லை என்று சிறுமியின் தாயார் கடந்த 14 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சிறுமிகள் இருவரும் கோவையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.

அவர்களை மீட்டு விசாரணையில் நடத்தியதில் சிறுமிகளின் தாய் துடியலூர் போலீசில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் துரைராஜ்(55) என்பவருடம் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் துரைராஜ் இரு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாகச் சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று கோவை அனைத்து மகளி போலீசார் போக்சோ வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் துரைராஜைக் கைது செய்தனர்.

arrested POCSO police
இதையும் படியுங்கள்
Subscribe