Skip to main content

“வீட்டில் இருந்தே படித்தேன்...” - முதல் முயற்சியிலேயே டாக்டர் சீட் வாங்கிய மாணவர் அறிவுநிதி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

'Study from home...'- Dr. Seat's student knowledge fund bought in the first attempt

 

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வில் 497 எம்பிபிஎஸ், 110 பிடிஎஸ் என அனைத்து இடங்களையும் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதில் ஒன்றிரண்டு மாணவர்களே இந்த ஆண்டு பள்ளியில் படித்து இதே ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க சீட்டு வாங்கியுள்ளனர். இவர்களும் தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். மற்ற அனைவருமே கடந்த ஒரு வருடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்தவர்களாக உள்ளனர்.

 

இதில் 50% கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வோர்களாக இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் மருத்துவர் கனவை நினைவாக்க வட்டிக்கு கடன் வாங்கி பயிற்சி மையங்களுக்கு அனுப்பி உள்ளனர்.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கச் செல்லும் 21 மாணவ, மாணவிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு படித்து இதே வருடம் நீட் தேர்ச்சி பெற்று நீலகிரி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவர் அறிவுநிதி நம்மிடம் பேசுகையில்,

 

''என் கனவு மருத்துவம். எங்கள் குடும்பம் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வைக்கும் வசதியான குடும்பம் இல்லை. அதனால் +1 தொடங்கியதுமே சில யூ டியூப்கள் மூலம் நீட் பாடங்களைத் தொடர்ந்து கவனித்து படிச்சேன். எனக்கு உதவியாக இருந்தது. இப்படி இணைய வழியில் படிக்கலாம் என்று கூட எனக்கு யாரும் வழிகாட்டவில்லை. என் சொந்த முயற்சியில் தான் படித்தேன். அதனால் எனக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. அதனால் ஏழை மாணவர்கள், நல்ல இணைய வழி பயிற்சிகள் உள்ளது. அதனை +1 படிக்கும் போதே படிக்கத் தொடங்கினால் சில மாதம் கோச்சிங்க்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை'' என்றார்.

 

'Study from home...'- Dr. Seat's student knowledge fund bought in the first attempt

 

அரசு பயிற்சிக்கு போய் இருக்கலாமே? என்ற கேள்விக்கு, “விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தமே 4 நாட்கள் நீட் கோச்சிங் வகுப்பு நடந்தது. அதிலும் டாப்பர்ஸ் என்று மாணவர்களைத் தேர்வு செய்து வகுப்பு நடந்தது. அதனால் எனக்கு பயனில்லை. காரணம் பள்ளி ஆசிரியர்களுக்குப் பள்ளி பாடம் நடத்திவிட்டு நீட் கோச்சிங் கொடுப்பது அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. அதனால் அரசு தனியாகவே பயிற்சியாளர்களை நியமித்து நீட் கோச்சிங் கொடுத்தால் என்னைப் போன்ற ஏழை மாணவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி பயிற்சிக்கு போகாமல், அரசு பயிற்சி மையத்திலேயே பயிற்சி பெறலாம். ஏழை மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தது போல தனியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நீட் கோச்சிங் கொடுக்க அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது தான் நடப்பு ஆண்டு மாணவர்கள் உடனடியாக நீட் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க முடியும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.