12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 4,207 தேர்வு மையங்களில் 9,96,089 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று துவங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. காலை 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.