Skip to main content

சாலை ஆறானது.. பள்ளி செல்ல முடியாத மாணவர்கள்.. வேலைக்கு போக முடியாத மக்கள்!-நீலகிரி அவலம்

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 

நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட கனமழைக்கு மலைகள் சரிந்து வீடுகள், உடமைகள் சேதமடைந்து அன்றாடம் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள். பழங்குயின மக்களுக்கு பாத்திரங்கள் கூட எஞ்சவில்லை. நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களிடம் எங்களுக்கு பசியை போக்க அரிசி கொடுக்குறீங்க ஆனா அதை சமைக்க பாத்திரம் இல்லை என்று வேதனையுடன் சொல்வதை தன்னார்வலர்கள் மனம்கனக்க கேட்டு வந்து பாத்திரங்களோடு சென்றனர். சில பழங்குடியினப் பெண்கள் தங்களுக்கு தையல் போன்ற தொழிற்பயிற்சி வேண்டும் என்று கேட்க அதையும் செய்வதாக தன்னார்வலர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இப்படி ஒவ்வொரு கிராமமாக சாலை இல்லாத இடங்களுக்கெல்லாம் தலையில் சுமந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருவதடன் அவர்களின் துயரங்களையும் நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள் தன்னார்வலர்கள்.

இதில் ஒரு குழவினர் ஒவேலி பார்வர்டு காவல்நிலையத்தின் கீழே செல்லும் சாலையில் நிவாரணப் பொருட்களுடன் பயணித்தனர். அந்த சாலை பாண்டிநகர் பகுதிக்கு சென்றது. சுமார் 2 கி மீ தூரம் நடந்தனர் ஆனால் பாதி வழியில் சாலையை காணவில்லை. சாலை இருந்த இடத்தில் ஆறு ஓடியது. மிகுந்த சிரமங்களுக்கிடையே பாண்டி நகரில் உள்ள 20 வீடுகளுக்கும் செல்ல முடியாவிட்டாலும் பல வீடுகளுக்கு சென்றனர். கையில் இருந்ததை கொடுத்தனர்.  அப்போது அந்த இளைஞர்களிடம். 

இங்கிருந்து என்ன வாங்க வேண்டியிருந்தாலும் பார்வர்டுதான் போகனும், எங்கள் குழந்தைகள் எல்லாரும் பார்வர்டு போய்தான் படிக்கனும். ஆனா மழையால் சுமார் 200 சாலையை காணும் சாலையில் இப்ப தண்ணீர் ஓடுது, பாறைகள் கிடக்கிறது. அதனால எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு போகமுடியல. நாங்களும் வேலைக்கு போக முடியாமல் முடங்கி கிடக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு அ.ராஜா எம் பி வந்தார் சாலையை சீரமைக்கிறதா சொன்னார் எந்த வேலையும் நடக்கல. சில அதிகாரிகளும் வந்தார்கள் போனார்கள் ஆனால் சாலைதான் வரல.உடனடியாக சாலையை சீரமைக்க முடியாதுதான் அதனால உடைப்புகளுக்கு அருகில் மரப்பாலமோ, எஸ்டேட்ல மாற்று பாதையோ உடனடியாக அமைத்துக் கொடுத்தால்தான் நாங்கள் வெளியே வரமுடியும் என்றனர்.

பாண்டி நகரில் சாலையில்லாமல் சிறைபட்டுள்ள மக்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி கொடுங்கள் என்று தன்னார்வ இளைஞர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக எம்பி அங்கே போனாரே என்பதற்காக அந்த பகுதியை புறக்கணிக்காமல் மக்களின் நிலையை மனதில் கொண்டு மாற்று வழி ஏற்படுத்தினால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் மக்கள் வேலைகளுக்கும் செல்வார்கள். அதிகாரிகள் கவனிப்பார்கள் மாற்று வழி ஏற்பாடு செய்வார்கள் என நம்புவோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.