பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு இயற்பியல் துறையின் ஆசிரியர் நந்தகோபால் என்பவர், பாடம் எடுத்து வந்துள்ளார். பள்ளியில் இயற்பியல் பாடத்திற்கான தேர்வை 100- க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வந்தனர். அப்போது, விரைவாக தேர்வை எழுதக்கோரி, ஆசிரியர் நந்தகோபால், பிரம்பால் மாணவர்களின் முதுகில் அடித்துள்ளார். இதனையறிந்த, மாணவர்களின் பெற்றோர் மாணவர்களுடன் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணபிரியா, ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.