Skip to main content

ஆசிரியரை மதிக்காத மாணவர்கள் சஸ்பெண்ட்...! டிக் டாக் ஆப்பின் விளைவு...!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை வகுப்பெடுக்கவிடாமல் அவரை கிண்டல், கேலி செய்தும். அவரின் நாற்காலியை இழுத்துத் தள்ளி வைத்து அவரை உட்காரவிடாமல் செய்தும், டிக் டாக் வீடியோ செய்தும் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்ட பிளஸ் 2 மாணவர்கள்  ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

 

pp

 

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டை கடந்து இயங்கிவருகிறது. 

 

 

இந்தப் பள்ளியில் வணிகவியல் பிரிவு ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் ஆசிரியரை வகுப்பு எடுக்கவிடாமல் தொடர்ந்து அவரை கேலி கிண்டல் செய்து தொந்தரவு செய்துவந்தனர். அவரின் நாற்காலியை இழுத்துவிட்டு அவரை உட்காரவிடாமலும் செய்தனர். மேலும் டிக் டாக் வீடியோ செய்தும் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தனர். 

 

pp

 

 

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சிவா தலைமையிலான கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேராக சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியரிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த அறிக்கையை கல்வித்துறை இயக்குநரகம், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ஆறு மாணவர்களை பள்ளிச் செயலாளர் நேற்று சஸ்பெண்ட் செய்தும், அதற்கான கடிதத்தை பள்ளி விளம்பரப் பலகையில் ஒட்டியும் உள்ளனர். அதேசமயம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வு எழுத அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.