Skip to main content

“குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்” - இறந்த பள்ளி மாணவியின் தாயார் செல்வி

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Student's mother Ms. press conference

 

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் தெரிவித்தார் என மாணவியின் தாயார் செல்வி கூறியுள்ளார்.

 

இன்று  சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவியின்  தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர்  நேரில் சந்தித்தனர். அப்போது  முதலமைச்சர்  அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். 

 

இது குறித்து செல்வி செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் "எனது மகள் மரணத்தில் குற்றவாளிகள் தப்பக்கூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விசாரணை வேகமாக நடந்து குறுகிய காலத்தில் வழக்கை முடிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். கலவரத்தில் ஈடுபடாத பள்ளி மாணவர்கள் பலரை கைது செய்துள்ளனர் அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடுவிக்க கேட்டுள்ளோம் . குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என முதல்வர் கூறினார். பிரேத பரிசோதனை தொடர்பான வீடியோ பதிவு மற்றும் பரிசோதனை அறிக்கை ஏதும் எங்களிடம் தரப்படவில்லை.  எங்களிடம் முதல் பரிசோதனை மற்றும் இரண்டாம் பரிசோதனை அறிக்கை மட்டுமே தந்தனர். ஜிப்மர் அறிக்கை எங்களிடம் இன்னும் தரப்படவில்லை.

 

முதல் இரண்டு உடற்கூறு ஆய்வுகளிலும் சில விஷயங்கள் மறைக்கப்பட்டு தான் உள்ளன. பள்ளி நிர்வாகம் தற்போது வரை சிசிடிவி காட்சிகளை இன்னும் காட்டவில்லை. குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட  ஐந்து பேர் ஜாமீனில் வெளியில் வந்தாலும் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படவில்லை. சிபிசிஐடி காவல் துறையினர் , எங்கள் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் மேலும் புதிதாக ஏதும் கண்டுபிடித்தார்கள் எனில் பெற்றோர் என்ற முறையில் எங்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். மாணவியுடன் படித்த மாணவர் ஆஜர் ஆகியுள்ளார் என   சிபிசிஐடியால் சொல்லப்படுகிறதே தவிர எனக்கு அவர்கள் யார் எனத் தெரியாது " எனக் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.