2020-2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கியுள்ளன. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கமான காலகட்டத்தைவிட தாமதமாக நடைபெற்று வரும் இந்த மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் ஆர்வமுடன் அதிகளவில் கல்லூரியில் சேர்ந்துவருகின்றனர். அந்தவகையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரியில் அட்மிஷனுக்காக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் காத்திருந்தனர்.