Skip to main content

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாயமான மாணவன் மீட்பு... பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது! 

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

 student recovery for fear of failing NEET exam; The heartbreaking letter written to the parents got stuck!

 

நீட் தேர்வில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் வீட்டைவிட்டு ஓடிய மாணவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டனர். பெற்றோருக்கு மாணவன் எழுதி வைத்த உருக்கமான கடிதமும் சிக்கியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு சேலம் வழியாக தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (22.09.2021) இரவு சேலம் வழியாக சென்ற அந்த ரயிலில், சேலம் ரயில்வே காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

ஜோலார்பேட்டை வரை அவருக்கு அந்த ரயிலில் இரவு ரோந்து பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு பெட்டியில் சுமார் 18 வயதுள்ள சிறுவன், தனியாக நின்றிருந்தான். பள்ளி மாணவன் போல தோற்றமளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவனிடம் தலைமைக் காவலர் விசாரித்தார். விசாரணையில் அந்த சிறுவன், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த மாதன் - அம்பிகாவதி தம்பதியின் மகன் விக்னேஷ் (18) என்பது தெரியவந்தது. மாதன், நீலகிரி மாவட்டம் கெந்தரை அரசு நிடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். செப். 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால், தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்திருப்பதும் தெரியவந்தது.  

 

 student recovery for fear of failing NEET exam; The heartbreaking letter written to the parents got stuck!

 

மாணவன் விக்னேஷை மீட்ட காவலர் விஜயகுமார், ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் தரப்பில், மகன் காணாமல் போனது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளதாவும், வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து கடிதம் எழுதி வைத்திருக்கிறான் என்றும், மகனை அழைத்துச் செல்ல காவல் நிலையம் வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே விக்னேஷ் எழுதி வைத்த கடிதத்தையும் காவல்துறையினர் சேகரித்தனர். அந்தக் கடிதத்தில் விக்னேஷ், “அன்புள்ள அப்பா, அம்மா... நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில், ஏமாற்றம்தான்.

 

உண்மையைக் கூற எனக்குப் பயமாக இருந்தது. இதற்கு மேலும், உங்களை அப்பா, அம்மா என்று அழைப்பதற்கும், இந்த வீட்டில் இருப்பதற்கும் எனக்குத் தகுதியில்லை. சரியா? தவறா? என்று தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் எனது வெற்றிப்பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம். இன்னும் சில வருடங்களில் நான் திரும்பி வருவேன். வெற்றி பெற்றவனாக... இது சத்தியம்” என எழுதி வைத்திருப்பதும் தெரியவந்தது. மாணவனின் பெற்றோர், வியாழக்கிழமை (செப். 23) காலையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் சென்றனர். விக்னேஷுக்கு புத்திமதி கூறிய காவல்துறையினர், அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர், மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.