Skip to main content

அரசுப் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை; நடத்துநரை வெளுத்து வாங்கிய உறவினர்கள்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

student relatives slapped govt bus conductor who misbehaved with her

 

பள்ளிபாளையம் அருகே, பேருந்தில் வரும் இளம்பெண்கள், மாணவிகளிடம் நடத்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் பொதுமக்கள்  பேருந்தை வழிமறித்து அவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (41). இவர், ஈரோட்டிலிருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசுப்  பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர், பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் ஜடையைப் பிடித்து இழுப்பது பின்புறம் தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் கிளம்பின. பாதிக்கப்பட்ட மாணவிகள் எச்சரித்த போதிலும், செல்லத்துரை மீண்டும் அதே செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.     

 

இந்நிலையில் பிப். 4ம் தேதி அந்தப் பேருந்து பள்ளிபாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்குச் செல்ல ஏறினார். பேருந்து  புறப்பட்டதும் அந்த மாணவியின் காதைப் பிடித்து திருகியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு அலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பேருந்தை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்துப் போட்டு  சரமாரியாகத் தாக்கினர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறையினர் செல்லத்துரையை மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பேருந்தில் ஏறும் இளம்பெண்களிடம் செல்லத்துரை தவறான செயல்களில் ஈடுபட்டது உண்மை எனத் தெரிந்தது. எனினும், பாதிக்கப்பட்ட மாணவி கேட்டுக்கொண்டதால் செல்லத்துரை மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.