Skip to main content

மாணவன் வெட்டிப் படுகொலை! சக மாணவன் கைது

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Student passed away police arrested his friend

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள டி. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது பதினேழு வயது மகன் கோகுல் இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு இவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் ஜெயபாரதி கோகுல் வைத்திருந்த செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது உறவினர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடியுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் வெட்டுக் காயங்களுடன் கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி பழனி, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பேனா கத்தி, வீச்சரிவாள் ஆகியவை கிடைத்துள்ளன. இதையடுத்து கோகுலின் தாயார் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், கோகுல் உறவினர்கள் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளி விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். 

 

அதன்படி போலீசார், கோகுலுடன் படிக்கும் கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக பள்ளி மாணவனை (17 வயது) சந்தேகத்தின் பேரில் தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் குண்டாக இருப்பதை கண்டு என்னை கோகுல் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தான். நேற்று முன்தினம் என்னை கிண்டல் செய்யும் போது என்னை சீண்டி அசிங்கப் படுத்தினான். இதனால் கடும் கோபமடைந்த நான், அவனை பழிவாங்க முடிவு செய்தேன். அதன்படி வெளிப்படையாக கோபத்தைக் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் கோகுல் வீட்டுக்குச் சென்று அவனை ஓட்டலுக்கு சாப்பிட போகலாம் என்று நட்பாக பேசி  அழைத்து வந்தேன். 

 

வரும்போது திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே காட்டுப் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் சிறுநீர் கழிப்பதாக கூறி இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினேன். இதை எதிர்பார்க்காத கோகுல், என்னிடம் எதிர்த்து சண்டைக்கு வந்தான். அப்போது நான் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து அவனை சரமாரியாக வெட்டினேன். அவன் தன்கையால் தடுத்தபோது கை துண்டானது. நிலை தடுமாறி கீழே விழுந்த கோகுலை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டேன்” இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தார். 


இந்த வாக்குமூலம் அளித்தபோது அந்த மாணவன் கதறி அழுததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் ஒத்த வயதுள்ள ஒரு மாணவன் ஒருவன் மட்டுமே கொலை செய்திருக்க முடியுமா? இன்னும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.