சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (24/01/2022) காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மத மாற்ற காரணத்தை யாரும் விசாரணையில் சொல்லவில்லை. 10, +2 பொதுத்தேர்வு மே மாதத்தில் கட்டாயம் நடத்தப்படும். பள்ளியில் மாணவர்களை எந்த வேலையும் வாங்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.