Skip to main content

மாணவர் உயிரிழப்பு: மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்கு! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

student incident nellai district police investigation

 

கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12- ஆம் வகுப்பு மாணவர் செல்வ சூர்யா என்ற மாணவர் படுகாயமடைந்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (30/04/2022) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

 

இந்த நிலையில், மாணவர் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த பாப்பாக்குடி காவல்துறையினர், அதே பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான சைபுதீன், பவுசில்சமீர், சுடலைமணி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இச்சம்பவம் அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்