Skip to main content

மாணவ சுகாதார தூதர்கள் ! -சென்னை மாநகராட்சியின் புதுமை வீடியோ ! 

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி்  அனைவரும் பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியதின் அவசியத்தையும்,  வீடுகளையும் வீதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்து மாநகராட்சி பள்ளி மாணவ தூதுவர்கள் பங்கேற்கும் பிரச்சார காணொளியை வெளியிட்டு ,   மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது சென்னை மாநகராட்சி !

 

student cleaniliness ambassadors

 

 

தலைநகர் சென்னையில் பொது மக்களிடையே சுத்தம் , சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி, மாணவ மாணவிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர்   பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சின் அறிவுரைப்படி கடந்த மாதம் மாணவ சுகாதாரத் தூதர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாணவ சுகாதார தூதர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றிய பிரச்சாரத்தை, குறிப்பாக டெங்கு ,தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுகொண்டார். இதன்தொடர்ச்சியாக காணொளி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்குகொள்ள மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்ட மாணவ சுகாதாரத் தூதர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வீடியோவை சென்னை மாநகராட்சி தயாரித்து வெளியிட்டுள்ளது. 

 

school


சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்கிற முழக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய சுயபொறுப்புணர்வை பொதுமக்களுக்கு வலியுறுத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

 

school

 

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ அனைத்து முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் சென்னையிலுள்ள பிரதான திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள் மூலமும் மாநகராட்சி மண்டலவாரியாக மழைக்கால நோய்தடுப்பு மற்றும் சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

school

 

இதனைத் தொடர்ந்து மழைக்கால நோய்களை தடுப்போம், டெங்கு கொசுக்களை ஒழிப்போம், பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் தவிர்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், வீடுகளில் கழிவுநீர் மற்றும் தூயநீர் தேங்காமலும் ஒத்துழைப்போம்,  மழை நீரை சேகரிப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் உள்ள 15 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் வீதிக்கு வீதி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் படிக்கும் பள்ளிகள் அருகே உள்ள வீதிகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று வீட்டுக்கு வீடு துண்டு பிரசுரங்களை வழங்குவார்கள் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.