நீட் தேர்வு பயிற்சி மைய மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி; திருப்பூரில் பரபரப்பு

A student attempted jumping from the floor of the NEET exam training center; stir in Tirupur

திருப்பூரில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள படியூர் பகுதியைச்சேர்ந்தவர் ஆனந்தி. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பயிற்சி மையம்ஒன்றில்நீட் பயிற்சி எடுத்து வந்தார் ஆனந்தி. இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல் ஆனந்தியை அவரது தந்தை நீட் தேர்வு பயிற்சி மையத்தில் விட்டுவிட்டுக் கிளம்பும்போது பயிற்சி மையமாடியிலிருந்து ஆனந்தி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்பொழுது படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத்தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணத்திற்காகமாணவி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

police student thirupur
இதையும் படியுங்கள்
Subscribe