Skip to main content

முந்திரிக்காடுகளை அழித்து விட்டு தைல மரங்களை நட முயன்றால் போராட்டம்: மெய்யநாதன் எம்.எல்.ஏ பேச்சு!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019


புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகள் இருந்த போது மழை குறைவில்லாமல் பெய்துள்ளது. நிலத்தடி நீரும் மேலே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காப்புக்காடுகள் உள்ளது. 69 ஆயிரம் ஏக்கரில் தைல மரக்காடுகள் வளர்க்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டுமின்றி காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டு அதிகமான அனல் காற்றை தைல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் வெளியிடுகிறது. அதனால் இவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனபதி தலைமையில் மணிகண்ணடன் முன்னிலையில் 20 நாட்களாக பிரச்சார கலைப்பயணம் கிராமங்கள் தோறும் சென்று வருகிறது. 20 வது நாளில் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் பிரச்சாரப்பயணத்தை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மெய்யநாதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசினார்.

 

 

Struggling to destroy coconut trees and try to plant oily trees: Meyyanathan MLA talk!

 

 

 

அவர் பேசியதாவது.. கீரமங்கலத்தை சுற்றி பல கிராமங்களில் முந்திரிக்காடுகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் முந்திரிக்காடுகள் வனத்துறைக்கும் வனவிலங்குகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காடுகளை அழிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதில் தைல மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அழிக்கப்படும் முந்திரிக்காட்டில் பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று இளைஞர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வனத்துறை தைல மரக்கன்றுகளை நட முயன்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் நீராதாரத்தை அழித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் தைல மரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அரசாங்கமே முற்றிலும் அகற்ற வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் 3 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

 

Struggling to destroy coconut trees and try to plant oily trees: Meyyanathan MLA talk!

 

அதே போல நீர்நிலைகளில் குளம், ஏரி, கரைகள், பொது இடங்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் பனை மரங்களை அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றார். விழாவில் முன்னால் பனங்குளம் முன்னால் ஊராட்சி மன்த்தலைவர்கள் மோகன்ராசு, கருணாகரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. தொடர்ந்து கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி உள்பட பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கையெழுத்து இயக்கமும் நடந்தது. தைல மரங்களை அழிக்க வேண்டும் என்று இதுவரை சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.