Skip to main content

அதிவேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களை கண்டித்து போராட்டம்; செல்பி எடுத்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் தெருவிற்குள் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்களை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தை செல்போனில் படம் பிடித்த மூன்று இளைஞர்களை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people



தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமிபுரம் சருக்குப்பட்டியில் தெருவிற்குள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று அதைத் தட்டிக் கேட்ட முரளி என்பவர் தாக்கப்பட்டார். முரளியை தாக்கியதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டித்தும், உடனடியாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஒரு பிரிவினர் ஆண்கள் பெண்கள் என  சுமார் மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people



போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலைவர்கள் காவல்துறையினரிடம் தங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தெலுங்கில் பேசினர். இதனை அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேர் செல்போனில் படம் பிடித்ததுடன் போராட்டத்தில் இருப்பதுபோல செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த கூட்டமும் அந்த இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியது.

 

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people

 

அந்த இளைஞர்கள் 3 பேரையும்  விரட்டிச் சென்ற பொதுமக்கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவர்களை மீட்டு அழைத்துச் செல்ல முயன்ற போதும் பெண்களும் அடிக்க பாய்ந்தனர். இதற்கிடையில் செல்போனில் படம் பிடித்த ஒருவர் ஹெல்மெட்டுடன் நழுவ முயன்று கூட்டத்திடம் சிக்கினார். அவரையும் போராட்டக்காரர்கள் சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து மூன்று பேரையும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்ட காவல்துறையினர் பலத்த எதிர்ப்புக்கிடையே அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.