Skip to main content

அதிவேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களை கண்டித்து போராட்டம்; செல்பி எடுத்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் தெருவிற்குள் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்களை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தை செல்போனில் படம் பிடித்த மூன்று இளைஞர்களை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people



தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமிபுரம் சருக்குப்பட்டியில் தெருவிற்குள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று அதைத் தட்டிக் கேட்ட முரளி என்பவர் தாக்கப்பட்டார். முரளியை தாக்கியதில் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டித்தும், உடனடியாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஒரு பிரிவினர் ஆண்கள் பெண்கள் என  சுமார் மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people



போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தலைவர்கள் காவல்துறையினரிடம் தங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தெலுங்கில் பேசினர். இதனை அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேர் செல்போனில் படம் பிடித்ததுடன் போராட்டத்தில் இருப்பதுபோல செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த கூட்டமும் அந்த இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியது.

 

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people

 

 Struggle to protest the youth driving the bike; Murderous attack on young people

 

அந்த இளைஞர்கள் 3 பேரையும்  விரட்டிச் சென்ற பொதுமக்கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவர்களை மீட்டு அழைத்துச் செல்ல முயன்ற போதும் பெண்களும் அடிக்க பாய்ந்தனர். இதற்கிடையில் செல்போனில் படம் பிடித்த ஒருவர் ஹெல்மெட்டுடன் நழுவ முயன்று கூட்டத்திடம் சிக்கினார். அவரையும் போராட்டக்காரர்கள் சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து மூன்று பேரையும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்ட காவல்துறையினர் பலத்த எதிர்ப்புக்கிடையே அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.