struggle of imposition of Hindi continues from generation to generation

தலைமுறை தலைமுறையாகத்தொடர்ந்து இந்தி திணிப்பு போராட்டத்தில்மத்திய அரசின் நடவடிக்கைக்குத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாட்டு மக்களின் செயல்இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisment

இந்தியாவில் உள்ள மாநிலங்களில்தமிழகத்தில் மட்டும்தான் இந்தி மொழி என்றாலே தீப்பொறி பறக்கிறது. என்ன காரணம் என்றால்இதற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில்இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக்கடந்த 1937ஆம் ஆண்டுசென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகுராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர்பதவியேற்ற ஒரு சில நாட்களில்6, 7, 8 ஆம் வகுப்புகளில்இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் என அறிவித்தார்.

Advertisment

அதற்குத்தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால்அதைப் பொருட்படுத்தாத ராஜாஜி அரசு 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டது. இதனால் வெகுண்டெழுந்த தனித் தமிழ் இயக்கங்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் வீதிக்கு வீதி போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல்அன்றைய ராஜாஜி அரசு திணறிப் போனது. ஒரு கட்டத்தில், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக ராஜாஜி அரசு அறிவித்திருந்தது.

தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிரான மனநிலை பல மாநிலங்களில் நிலவி வந்தது. ஆனால், இத்தகைய போராட்டங்கள் அன்றோடு முடியவில்லை. தற்போது வரை தொடர்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இந்தி மொழியைத்திணிப்பதற்கான வேலைகளைமத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்சேலத்தைச் சேர்ந்த மூத்த திமுக தொண்டர் தங்கவேல்கடந்த 26 ஆம் தேதி தீக்குளித்த சம்பவம்தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்துதிருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில்தமிழ் மொழியை மறைத்துஅதன் மேல் இந்தி எழுத்தால் 'சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழி என்ற அறிவிப்பு பலகை இந்தியில் திவ்யாங்ஜன் என எழுதப்பட்டிருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில்தற்போது அந்த ஸ்டிக்கர்களை அதிகாரிகள் அகற்றினர்.

தமிழகத்தில்இந்தியைத்திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத்தமிழர்கள் மத்தியில்கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.