Skip to main content

விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

Struggle against setting up power towers on agricultural lands!

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அழகம்பட்டி, கொடைரோடு, அம்மாபட்டி, சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விருதுநகரில் இருந்து திருப்பூர் வரையியே உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக சிறு குறு விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி அதில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மின் கோபுரம் அமைப்பதற்கு நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதியில் பூக்கள் அதிகமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

 

50 சென்ட் முதல் ஒரு ஏக்கர் அளவிலான நிலங்களிலே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களிடம் அடித்து பிடுங்குவது போல் நிலங்களை பிடுங்கி உயர்மின் கோபுரம் அமைப்பதாக கூறி அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று சில்குவார்பட்டி அருகே மின் கோபுரம் அமைக்கும் விளைநிலத்தில் நிலக்கோட்டை தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அ.தி.மு.க, பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகிக்கும்  தே.மு.தி.க மத்திய, மாநில அரசுகளை  கண்டித்து போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அ.தி.மு.க - தே.மு.தி.க - பா.ம.க கூட்டணி உறுதி?

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
ADMK and DMDKand  PMK alliance confirmed?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தொகுதி பங்கீடுகளை முடிவு செய்து, வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது. அதே நேரம் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில், அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் கூட்டணி குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இது குறித்து இரு கட்சிகள் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. 

அதே வேளையில், அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16ஆம் தேதி 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.  இது போன்று, அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு  மாநிலங்களவை இடத்துக்கும் பா.ம.க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இறுதி முடிவு எட்டப்பட்டு, அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ம.க இடையே மார்ச் 20ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர், பா.ம.க தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.