'' Strive to bring Congress rule in Tamil Nadu '' - KS Alagiri speech!

பெருந்தலைவர் காமராஜரின் 119வதுபிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும்காமராஜரின்திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இது தொடர்பாக அறிக்கைகளையும் வெளியிட்டுவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ''காமராஜரின் ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டுவர காங்கிரஸ் கட்சியினர் இந்நாளில் உறுதிமொழி ஏற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினருக்கு அதற்கு குறைந்த எந்த இலக்கும் இருக்கக்கூடாது. திமுக கூட்டணியில் இருக்கும்போது எப்படி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என சிலருக்கு சந்தேகம் வரலாம். கூட்டணியில் இருக்கக்கூடிய காரணத்தால் நாளை நாம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அதற்காக பாடுபடுங்கள்'' என்றார்.