குமரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் அதன் காரணமாக இன்று நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.