Skip to main content

ஈரோட்டில் மீண்டும் ஸ்டிரிக்ட்... 

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகவும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாகவும் ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டுவந்த நேதாஜி பெரிய மார்க்கெட் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.  அங்கு தற்போது மொத்த விற்பனையும், சில்லறை விற்பனை பணியும் நடைபெற்று வருகிறது. மொத்த விற்பனை இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரையும் நடைபெற்று வருகிறது.

 

 Strict back in Erode ...


கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே ஒரு கடைக்கு 3 மீட்டர் இடைவெளிவிட்டு  மற்றொரு கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் வகையில் வட்டம் வரையப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக  இருப்பதால்  இதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் ஈரோடு மேட்டூர்  சாலை வழியாக வரும்போது ஒரு மீட்டர் இடைவேளை விட்டு ஒரு மீட்டர் நிற்கும் வகையில் வட்டம் போடப்பட்டு அதில் பொது மக்கள் வரிசையாக நின்றனர்.  

50 நபர்கள் 50 நபர்களாக தனித்தனியாக மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது முதலில் 50 நபர்கள் உள்ளே சென்றவுடன் மற்ற நபர்கள் நுழைவாயிலில் வரிசையாக நிற்பார்கள். பின்னர் அந்த 50 நபர்களுக்கு காய்கறி வாங்கி சென்றவுடன் அடுத்த 50 நபர்கள் காய்கறி வாங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் டெல்லி மாநாடுக்குச் சென்றவர்கள் உட்பட 40 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு இன்னமும் ரத்த பரிசோதனை முடிவு வரவேண்டியதுள்ளது. இந்நிலையில் நேற்று கவுந்தப்பாடி மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இன்று காலை முதல் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டது.

அதேபோல் கவுந்தப்பாடியிலும் ஒவ்வொரு வீதிகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டது. மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஈரோடு மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு காவல் பணி ஸ்டிரிக்ட் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.