Skip to main content

“பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை” - டிஜிபி சைலேந்திரபாபு 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

"Strict action against offenders" - DGP Silenthrababu

 

தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு, நேற்று காவல் துறை சம்பந்தமான ஆய்வு கூட்டத்தை விழுப்புரத்தில் நடத்தினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முறையே சக்தி கணேஷ், ஸ்ரீ நாதா, செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய சைலேந்திரபாபு, “தமிழகத்தைப் பொருத்தவரை ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, ஒவ்வொரு காவல் சரகம் வாரியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஒழுங்கு பராமரிப்பு குறித்த்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 


சில தினங்களாக நடைபெற்று வரும் கஞ்சா வேட்டையில் போலீசாரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் பழைய வாகனங்களை உடனுக்குடன் பொது ஏலம் விட்டு அதன் மூலம் வரும் வருவாயை அரசுக்கு செலுத்தி வருகிறோம். விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை பொருத்தவரை இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. 

 

சமீபகாலங்களில் பாலியல் குற்றங்களில் பாதித்தவர்களின் உறவினர்கள் கூட முன் வந்து காவல்துறையிடம் புகார் கொடுக்கவில்லை. சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் தகவலின்பேரில் அவர்களே முன்வந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். போலீசாருக்கு சிறந்த திட்டங்களுக்கான அறிவிப்புகள் காலப்போக்கில் வரும். குற்றவாளிகளுக்கு காவல்துறையில் உள்ள யாராவது துணையாக இருந்தால் அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் சுமார் இருபத்தி மூன்று கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா சம்பந்தமாக 1237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 1721 பேர் கைது செய்யப்பட்டனர். 180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற வேண்டும். 


சென்னை புறநகர்ப் பகுதியில் குற்றவாளிகளுடன் சில காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களை கூண்டோடு களையெடுத்து அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காவல்துறையை சேர்ந்தவர்கள் யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளனர் அவளுடைய நடவடிக்கை எப்படி என்பது குறித்து தொடர் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக நடவடிக்கையும் எடுத்து வரப்படுகிறது. 


பாலியல் குற்றம் உட்பட அனைத்து வழக்குகளிலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எந்த இடத்தில் ஏற்பட்டாலும் உடனடியாக அந்த இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்வுபெற இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்; தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Shailendrababu IPS who is about to retire; Who will be the next DGP of Tamil Nadu?

 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இன்று டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் அடுத்த தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காகத் தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

 

இதில் தமிழ்நாடு கேடரில் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாத ஐந்து மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு அதில் மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் அதில் ஒருவர் தமிழக டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழ்நாடு கேடரில் டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா, பி.கே. ரவி, தற்போது சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ் குமார் ஆகியோர் தமிழ்நாடு கேடரில் மூத்த அதிகாரிகளாக உள்ளனர். இவர்களில் ஒருவரே தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

Next Story

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு உத்தரவு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

What was the action taken against Shivaji Krishnamurthy?-Direction to DGP to submit report

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''நான்கு ஆண்கள் அமர்ந்து கொண்டு பெண்கள் முன்னாடி வந்து விடக்கூடாது, எதிராக பேசக்கூடாது என்று பார்க்கிறார்கள். இன்று முதல்வர் பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றால் பாருங்கள், நாளைக்கு என் வீட்டில் 10 பேர் கல் தூக்கி வீசினாலும் எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. திமுகவினர் என் வீட்டில் கல் வீசியதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. அதை எப்படி சந்திக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்'' என ஆவேசமாக பேசியிருந்தார்.

 

n

 

அதைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என குஷ்பு தெரிவித்தார். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என குஷ்பு கூறியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

 

nn

 

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து தமிழக டிஜிபிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'இந்த விவகாரத்தில் என்னென்ன பிரிவுகளில் எல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் விரிவாக அறிக்கையாக தயாரித்து, மூன்று நாட்களுக்குள் ஆணையத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.